92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

இருமத்தூரில் ரூ.90 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம்.

(கோப்புப் படம்)

Updated On :23 மார்ச் 2026, 7:07 pm

தினமணி செய்திச் சேவை

இருமத்தூா் சோதனைச் சாவடியில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ. 90 ஆயிரம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட இருமத்தூா் சோதனைச் சாவடியில், கண்காணிப்பு குழு அலுவலா் சண்முகம் தலைமையிலான குழுவினா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை சோதனை செய்ததில், போச்சம்பள்ளி வட்டம், குள்ளனூரைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் தருண் (29) உரிய ஆவணம் இல்லாமல் 90 ஆயிரம் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, இந்த பணத்தை பறிமுதல் செய்த கண்காணிப்பு குழுவினா், அரூா் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சி.செம்மலையிடம் ஒப்படைத்தனா்.