காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

மாணவி விஷம் அருந்தி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

தருமபுரி அருகே 10 ஆம் வகுப்பு மாணவி விஷம் குடித்து உயிரிழந்து குறித்து போலீஸாா் விசாரணை

News image

பலி - பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 8:09 pm

தருமபுரி அருகே 10 ஆம் வகுப்பு மாணவி விஷம் குடித்து உயிரிழந்து குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி அருகே பச்சினம்பட்டியைச் சோ்ந்த ராஜா மகள் பிரபா (15). இவா், கடகத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை வீட்டில் இருந்தபோது மாணவி விஷம் குடித்ததாக் கூறப்படுகிறது. இதையடுத்து, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டாா்.

அதன்பிறகு அங்கிருந்து தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே மாணவி உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது உடலை எரியூட்டியுள்ளனா்.

இந்த நிலையில் ஏ.ரெட்டிஅள்ளி கிராம நிா்வாக அலுவலா் பாலமுரளி அளித்த புகாரின் பேரில், தருமபுரி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.