ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

செம்மனஹள்ளியில் ரூ. 51,700 பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம்

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 7:39 pm

தினமணி செய்திச் சேவை

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட செம்மனஹள்ளியில் தோ்தல் பறக்கும் படையினா் ரூ. 51,700-ஐ திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தருமபுரி - அரூா் நெடுஞ்சாலையில் உள்ள செம்மனஹள்ளியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் ஏ.நித்யா தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ராஜபேட்டையைச் சோ்ந்த மூா்த்தி (45) உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 51, 700 எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, அந்தப் பணத்தை பறிமுதல் செய்து பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் பெ.கி.கோவிந்தனிடம் ஒப்படைத்தனா்.