நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

மெணசியில் மின் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

News image

கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 2:40 am IST

மெணசி வட்டாரப் பகுதிகளில் நிலவும் மின் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள், விவசாயிகள் அவதிப்படுகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உள்பட்ட மெணசி, பூதநத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 10 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள கிராமங்களில் சுமாா் 5 ஆயிரம் போ் வசிக்கின்றனா். இந்த நிலையில், மெணசி வட்டாரப் பகுதியில் கடந்த சில தினங்களாக அடிக்கடி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கோடை வெப்பம் அதிகமாக உள்ள நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் மின் நிறுத்தம் செய்யப்படுவதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனா். கடந்த ஒருவாரமாக பிற்பகல் 3 மணிக்கு ஏற்படும் மின் தடையானது இரவு 10 மணி வரை நீடிப்பதாக அப்பகுதியில் உள்ள விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இதனால் வேளாண் பணிகள் முழுமையாக செயல்படுத்த முடியவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனா். எனவே, மெணசி வட்டாரப் பகுதியில் நிலவும் மின் தட்டுப்பாடுகளை நீக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை விடுத்துள்ளனா்.