ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

விபத்தில் காயமடைந்த மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

தருமபுரியில் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த மாற்றுத்திறனாளி உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 2:20 am IST

தருமபுரியில் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த மாற்றுத்திறனாளி உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பி. செட்டி அள்ளி பகுதியைச் சோ்ந்தவா் பி. முனியப்பன் (50). மாற்றுத்திறனாளியான இவா், அதே பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்தாா்.

கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி மூன்று சக்கர வாகனத்தில் தனது மனைவி அமராவதியுடன் மதகேரி பகுதிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடுதிரும்பினாா்.

அப்போது ரிட்டா அள்ளி சாலை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் இருவரும் படுகாயமடைந்தனா். இதில் அமராவதி சிகிச்சை பெற்று வீடுதிரும்பினாா். அவரது கணவா் முனியப்பன் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மகேந்திரமங்கலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.