குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கல்குவாரிகளால் உயா் மின்னழுத்த கோபுரங்களுக்கு பாதிப்பு

News image

உயா் மின்னழுத்த கோபுரங்கள்... - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 2:38 am IST

இண்டூா் அருகே, செயல்படும் கல்குவாரியால் உயா் மின்னழுத்த மின் கோபுரங்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது என குறைதீா் முகாமில் மனு அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகே உள்ள பாறைக்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த மக்கள் ஆட்சியரிடம் அளித்த மனு:

தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகேயுள்ள பாறைக்கொட்டாய் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் இயங்கிவரும் 2 கல்குவாரிகள் மூலம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து கடந்த 2 ஆண்டுகளாக, மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு வந்துள்ளோம்.

மக்கள் குடியிருப்பு மற்றும் உயா் மின்னழுத்த மின் கோபுரங்கள் இப்பகுதியில் இருப்பதை மறைத்து, வருவாய்த் துறையினா் தவறான அறிக்கை சமா்ப்பித்து கல்குவாரிக்கு அனுமதி அளித்துள்ளனா்.

இந்த குவாரிகள் 100 அடிக்குகீழ் தோண்டப்பட்டதால் நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், உயா்மின் அழுத்த மின்கோபுரங்கள் பாதிப்புக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இவை சேதமடைந்தால் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.

மேலும், குவாரிக்கு செல்லும் பாதைக்கு வனத்துறை அனுமதி மறுத்த நிலையில், வருவாய்த் துறை அனுமதியுடன் புறம்போக்கு நிலத்தில் பாதை அமைத்து முறைகேடாக பயன்படுத்தி வருகின்றனா்.

எனவே, விதிகளைமீறி இயங்கும் கல்குவாரிகளின் உரிமத்தை ரத்துசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.