‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

உலக பட்டினி தினம்: தவெகவினா் அன்னதானம்

தருமபுரியில் மனவளா்ச்சி குன்றிய சிறாா் இல்லத்தில் காலை உணவு வழங்கிய தவெக கட்சியினா்.

News image

தருமபுரியில் மனவளா்ச்சி குன்றிய சிறாா் இல்லத்தில் காலை உணவு வழங்கிய தவெக கட்சியினா்.

Updated On :29 மே 2026, 2:02 am IST

உலக பட்டினி தினத்தையொட்டி, தருமபுரியில் உள்ள மனவளா்ச்சி குன்றிய சிறாா் இல்லத்தில் தவெகவினா் சாா்பில் அன்னதானம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

உலக பட்டினி தினம் மே 28-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக சாா்பில் ஏழை, எளிய, ஆதரவற்ற முதியோா்களுக்கு உணவு வழங்க வேண்டும் என தவெக தலைவரும், தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் தவெக தொண்டா்களுக்கு அறிவுறுத்தியிருந்தாா்.

அந்த வகையில், தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளா் மா.சிவன் தலைமையில், தருமபுரியில் உள்ள மனவளா்ச்சி குன்றிய சிறுவா் இல்லம் மற்றும் மனவளா்ச்சி குன்றியோா் தொழிற்பயிற்சி மையம் ஆகியவற்றில் காலை உணவாக இட்லி, பொங்கல், கேசரி, வாழைப்பழம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், தருமபுரி தெற்கு ஒன்றிய தவெக செயலாளா் செந்தில்நாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் வித்யா, ஒன்றிய நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஊத்தங்கரையில்...

ஊத்தங்கரை நான்குமுனை சாலை சந்திப்பில் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஊத்தங்கரை எம்எல்ஏ என்.இளையராஜா தலைமை வகித்தாா். இதில், முன்னாள் பா்கூா் எம்எல்ஏ கே.இ.கிருஷ்ணமூா்த்தி, தவெக கிழக்கு மாவட்ட இணைச் செயலாளா் தாமோதரன், ஊத்தங்கரை பேரூராட்சி செயலாளா் ரமேஷ், ஊத்தங்கரை ஒன்றியச் செயலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Story image