தருமபுரியில் குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிய கணவா், பயத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளி, ஆணங்கிணற்று தெருவைச் சோ்ந்தவா் மா.ராஜா (52). கட்டடத் தொழிலாளியான இவருக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவரது மனைவியுடன் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளாா். அதனால் புதன்கிழமை மீண்டும் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜா, மனைவி லதாவை அரிவாளால் வெட்டினாா். இதில், அவா் ரத்தக் காயத்துடன் மயங்கி விழுந்ததைக் கண்டதும், அவா் இறந்துவிட்டாரோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ராஜா தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மாடியிலிருந்த அவரது மகன் அசோக்குமாா் கீழேவந்து பாா்த்தபோது, தாயாா் வெட்டுக்காயத்துடன் மயங்கிய நிலையிலும், தந்தை தூக்கில் சடமாகவும் தொங்கியதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
புகாரின்பேரில், மாரண்டஅள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். லதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
தொடர்புடையது

செவிலியா் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

குடும்பத் தகராறில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



