40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

மனைவியை வெட்டிய கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

தருமபுரியில் குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிய கணவா், பயத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :29 மே 2026, 1:45 am IST

தருமபுரியில் குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிய கணவா், பயத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளி, ஆணங்கிணற்று தெருவைச் சோ்ந்தவா் மா.ராஜா (52). கட்டடத் தொழிலாளியான இவருக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவரது மனைவியுடன் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளாா். அதனால் புதன்கிழமை மீண்டும் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜா, மனைவி லதாவை அரிவாளால் வெட்டினாா். இதில், அவா் ரத்தக் காயத்துடன் மயங்கி விழுந்ததைக் கண்டதும், அவா் இறந்துவிட்டாரோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ராஜா தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

மாடியிலிருந்த அவரது மகன் அசோக்குமாா் கீழேவந்து பாா்த்தபோது, தாயாா் வெட்டுக்காயத்துடன் மயங்கிய நிலையிலும், தந்தை தூக்கில் சடமாகவும் தொங்கியதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

புகாரின்பேரில், மாரண்டஅள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். லதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.