பூப்பந்து போட்டி: செல்லியம்பட்டி பள்ளி மாணவர் சிறப்பிடம்

பூப்பந்து போட்டியில் தருமபுரி மாவட்டம், செல்லியம்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளி மாணவர் சிறப்பிடம் பெற்றார்.
Updated on
1 min read

பூப்பந்து போட்டியில் தருமபுரி மாவட்டம், செல்லியம்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளி மாணவர் சிறப்பிடம் பெற்றார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில், அண்மையில் பல்வேறு மாநிலங்களுக்கிடையேயான பூப்பந்து போட்டிகள் நடைபெற்றன. 
இந்தப் போட்டியில், தமிழக அணி சார்பில், செல்லியம்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளி மாணவர் மு. லோகேஷ் பங்கேற்று இரண்டாம் இடம் பெற்றார்.
இந்த மாணவரைப் பள்ளித் தலைமை ஆசிரியர் மைக்கேல்ராஜ், விஸ்வபாரதி பள்ளித் தாளாளர் சுதாகர், தருமபுரி மாவட்ட பூப்பந்தாட்ட கழகச் செயலர் கே.எஸ். கந்தசாமி, பயிற்சியாளர் துரை உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com