இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

வெள்ள நிவாரண உதவிகள் அனுப்பி வைப்பு

கேரள மாநிலத்தில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தருமபுரி மக்கள் மன்றம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை ரூ. 5 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகள் லாரியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Updated On :20 ஆகஸ்ட் 2018, 8:29 am IST

கேரள மாநிலத்தில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தருமபுரி மக்கள் மன்றம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை ரூ. 5 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகள் லாரியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, சமையல் எண்ணெய், பொடி வகைகள், வெங்காயம், இஞ்சி மற்றும் மசாலாப் பொருட்கள் அடங்கிய ஒரு தொகுப்பு ரூ. 815 மதிப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி, 500 குடும்பங்களுக்குத் தேவையான தொகுப்புகள் மற்றும் இதர நிவாரணப் பொருட்களும் ஞாயிற்றுக்கிழமை சேகரிக்கப்பட்டன.
தருமபுரி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், புரவலர்கள் இதற்கான தொகைகளை பங்களித்தனர். கேரள மாநிலம் பாலக்காட்டில் தற்போது பணியாற்றி வரும் தன்னார்வலர்கள் மூலம் இவை நேரடியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளது.
தொடர்ந்து இன்னும் சில நாள்களுக்கு கேரள மாநிலத்துக்கு நிவாரண உதவிகள் அனுப்பி வைக்கும் பணி தொடரும் என மக்கள் மன்றத்தினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.