இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

பத்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி,  கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

பத்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி,  கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கமலேஷ் சந்திரா அறிக்கையை 2016 ஜனவரி 1  முதல் அமல்படுத்த வேண்டும். கிராமப் புறங்களில் பணியாற்றுவோருக்கு 8 மணி நேர வேலை, பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை தங்களது காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர்.
தருமபுரி மாவட்டத்தில்,  224  கிராமப்புற அஞ்சலங்களில் 504 பேர் பணியாற்றுகின்றனர். இதில், 124 அஞ்சலகங்கள் மூடப்பட்டு,  272 பேர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீதமுள்ள, 100 அஞ்சலகங்களில், 232 பேர் பணியில் ஈடுபட்டனர். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால், கடிதங்கள் உரியவர்களுக்கு வழங்குவது, பணப் பரிவர்த்தனை, வர்த்தகம் ஆகியவை பாதிக்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.