/

தேசிய அளவிலான போட்டி: பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் மருதிப்பட்டி டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அரசு

Updated On :31 டிசம்பர் 2018, 8:31 am IST

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் மருதிப்பட்டி டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு அண்மையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தேசிய அளவிலான ரோப் ஸ்கிப்பிங் போட்டிகள் , சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் டிசம்பர் 26 முதல் 29-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் மருதிப்பட்டி டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கோமதி, பரிமளா, யாழினி,  மதிவதனி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இதையடுத்து, இந்த விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாணவியர்களுக்கு தேவையான உதவிகளை தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் கே.வி.கே சாமி வழங்கினார்.
இதில், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வைரமணி, பள்ளித் தலைமை ஆசிரியர் மகாதேவன், உடற்கல்வி ஆசிரியர் சாமுவேல் வில்லிங்கடன்,  ஆசிரியர் இளஞ்செழியன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாணவிகளை பாராட்டி, வழியனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.