மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

பேருந்து வசதியின்றி மாணவர்கள் அவதி

பாலக்கோடு அருகே பேருந்து வசதியில்லாததால் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிக்குச் செல்லமுடியாமல் அவதிப்படுகின்றனர்.

Updated On :23 ஜூலை 2018, 9:29 am IST

பாலக்கோடு அருகே பேருந்து வசதியில்லாததால் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிக்குச் செல்லமுடியாமல் அவதிப்படுகின்றனர்.
பாலக்கோடு அருகே உள்ள கும்மனூர் பாலம்பட்டி தோப்பு கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப் பகுதியிலிருந்து நாள்தோறும் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அருகேயுள்ள ராயக்கோட்டை அரசு பள்ளிகளுக்குச் சென்று படித்து வருகின்றனர்.
காலை நேரத்தில் இப் பகுதிக்கு பேருந்து இயக்கப்படாததால் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிக்குச் செல்ல முடியாமல் டெம்போ, மினி லாரிகளில் செல்வதாகக் கூறப்படுகிறது. அப் பகுதி வழியாக பாலக்கோட்டிலிருந்து கூலிக்கானூர்  ஓடையாண்ட அள்ளி  வழியாக செல்லும் பேருந்து 9.30 மணிக்கு மேல் வருவதால் மாணவர்களுக்கு பயனில்லாமல் உள்ளது. எனவே, காலை நேரத்தில் பேருந்து இயக்க வேண்டும் என மாணவர், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.