ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை விரைந்து தொடங்கக் கோரி, எல்.ஐ.சி. ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி எல்.ஐ.சி. கிளை அலுவலகம் முன் அதன் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, ஊழியர் சங்க கிளைத் தலைவர் வேடியப்பன் தலைமை வகித்தார். முதல்நிலை அதிகாரிகள் சங்க உதவி கோட்ட மேலாளர் குமார், வளர்ச்சி அதிகாரிகள் சங்க கிளைச் செயலர் குமரேசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், ஊதிய உயர்வுக்கான பேச்சு வார்த்தையை விரைந்து தொடங்க வேண்டும். 1995-ஆம் ஆண்டு ஓய்வூதியத் திட்டத்தில் இணைய வாய்ப்பளிக்க வேண்டும். மூன்றாம் மற்றும் நான்காம்நிலை ஊழியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். முதல்நிலை அதிகாரிகளின் பதவி உயர்வில் மாற்றங்களை திரும்பப் பெற வேண்டும். வளர்ச்சி அதிகாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதில், ஊழியர் சங்க கோட்ட இணைச் செயலர் மாதேஸ்வரன், கிளைச் செயலர் மகேந்திரன், பொருளாளர் சரவண குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தின் மிரட்டலை நாடாளுமன்றத்தில் செய்து காட்டிவிட்டோம்: கமல்ஹாசன்

வீட்டிற்கு ஒரு சமூக நீதி கோகிலாமணி உருவாக திமுகவிற்கு வாக்களியுங்கள்: கமலஹாசன்
லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நினைவு நாள்: காஷ்மீரில் சுற்றுலா தலங்களில் பலத்த பாதுகாப்பு!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

