டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

மே 29-இல் கட்டடத் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்

கட்டடத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, வருகிற மே 29 -ஆம் தேதி தொழிலாளர் நல அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என ஏஐடியூசி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :14 மே 2018, 9:17 pm

DIN

கட்டடத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, வருகிற மே 29 -ஆம் தேதி தொழிலாளர் நல அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என ஏஐடியூசி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தின், தருமபுரி மாவட்டக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை அச்சங்கத்தின், மாவட்டத் தலைவர் மாதையன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலர் கே.ரவி, கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
இக்கூட்டத்தில், கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் ரூ.1,200கோடி நிதி இருந்தும், தொழிலாளர்களின் நலன் காக்கப்படாதது, ஆயிரக்கணக்கானோர் ஓய்வூதியம் கோரி மனு அளித்து காத்துக் கிடப்பது, விபத்து, மரணம் உள்ளிட்டவற்றுக்கு நிவாரண நிதிக்காக அலைக்கழிப்பு ஆகிவற்றுக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும். மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 29-ஆம் தேதி மாவட்டத் தொழிலாளர் நல அலுவலகம் முன் வீடு திரும்பா காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மாநிலச் செயலர் முனுசாமி, ஏஐடியூசி மாவட்டத் தலைவர் எம்.மாதேஸ்வரன், கட்டட சங்க மாவட்டப் பொதுச் செயலர் ஆர்.சுதர்ஷனன், பொருளாளர் விஜயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.