கட்டடத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, வருகிற மே 29 -ஆம் தேதி தொழிலாளர் நல அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என ஏஐடியூசி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தின், தருமபுரி மாவட்டக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை அச்சங்கத்தின், மாவட்டத் தலைவர் மாதையன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலர் கே.ரவி, கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
இக்கூட்டத்தில், கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் ரூ.1,200கோடி நிதி இருந்தும், தொழிலாளர்களின் நலன் காக்கப்படாதது, ஆயிரக்கணக்கானோர் ஓய்வூதியம் கோரி மனு அளித்து காத்துக் கிடப்பது, விபத்து, மரணம் உள்ளிட்டவற்றுக்கு நிவாரண நிதிக்காக அலைக்கழிப்பு ஆகிவற்றுக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும். மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 29-ஆம் தேதி மாவட்டத் தொழிலாளர் நல அலுவலகம் முன் வீடு திரும்பா காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மாநிலச் செயலர் முனுசாமி, ஏஐடியூசி மாவட்டத் தலைவர் எம்.மாதேஸ்வரன், கட்டட சங்க மாவட்டப் பொதுச் செயலர் ஆர்.சுதர்ஷனன், பொருளாளர் விஜயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!
ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! எஃப்-35-ஐவிட இரு மடங்கு விலை அதிகமா?

விதிமீறல்! விஜய் மீது வழக்குப் பதிவு!

ஊழல் செய்த திமுக அமைச்சா்கள் மீது நடவடிக்கை: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

