அரூர் அருகே மான் வேட்டையாடிய இருவருக்கு ரூ. 2 லட்சம் அபராதம் திங்கள்கிழமை விதிக்கப்பட்டது.
அரூர் வட்டம், கீழ்மொரப்பூர் காப்புக்காடு வெள்ளைக்குட்டை பகுதியில் மொரப்பூர் வனச்சரகர் தீ.கிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வனப்பகுதியில் மர்ம நபர்கள் 2 பேர் சுற்றித் திரிவது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் சேலம் மாவட்டம், வழியங்காடு கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி மகன் லட்சுமணன் (37), அய்யம்பெருமாம்பட்டியைச் சேர்ந்த குள்ளப்பன் மகன் சிவசாமி (29) என்பதும், இவர்கள் உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கியால் ஒரு பெண் புள்ளி மானை வேட்டையாடியதும் தெரியவந்தது. இதையடுத்து, பிடிப்பட்ட இருவரையும் வனத் துறையினர் தருமபுரி மாவட்ட வன அலுவலர் க.திருமால் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, வன விலங்குகளை வேட்டையாடிய குற்றத்துக்காக லட்சுமணன், சிவசாமி ஆகிய இருவருக்கும் தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பத்தூா் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி!

பழனியில் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

