தருமபுரி மாவட்டத்தில் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இதுவரை பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களில் தகுதியானவற்றை பள்ளியின் தகவல் பலகையில் வெளியிட வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு. ராமசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு
சிறாருக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2018-19ஆம் கல்வியாண்டில் எல்கேஜி முதல் 1ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் சேருவதற்கு கடந்த மே 18ஆம் தேதி வரை பெற்றோர்கள் இணையவழியில் விண்ணப்பித்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் இச்சட்டத்தின்கீழ் 75 மெட்ரிக் பள்ளிகள் மற்றும் 97 நர்சரி பள்ளிகளில் மொத்தம் 3,287 (25 சதவிகிதம்) இடங்கள் உள்ளன. இவற்றுக்கு இணையவழியில் விண்ணப்பித்தோரில் தகுதியானவர்களின் பட்டியலை வரும் மே 25ஆம் தேதி பள்ளியின் தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.
மே 28ஆம் தேதி குலுக்கல் முறையில் சிறார்கள் தேர்வு செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலையும் தகவல் பலகையில் மே 29ஆம் தேதி வெளியிட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது!

கொக்கராயன்பேட்டையில் தறித் தொழிலாளி தற்கொலை

வணிக சிலிண்டா் விலை உயா்வால் ஹோட்டல்களில் உணவு வகைகள் குறைப்பு: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

சிம்ஸ் பூங்கா பழக் காட்சி: போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் பெற அழைப்பு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

