தருமபுரி மாவட்டத்தில் வெற்றிலை சாகுபடிக்குப் பெயர் போன வெள்ளோலை பகுதி, வறட்சி மற்றும் உற்பத்திச் செலவு அதிகரிப்பு ஆகியவற்றால் கடந்த 10 ஆண்டுகளில் பெரும் சரிவைச் சந்தித்திருக்கிறது.
வெள்ளோலை பகுதியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏறத்தாழ 50 ஏக்கரில் நடைபெற்ற வெற்றிலை சாகுபடி, இப்போது அதிகபட்சம் 20 ஏக்கரைத் தாண்டாது என்கிறார்கள் அப் பகுதி மக்கள்.
எல்லாவிதமான வீட்டு விசேஷங்களிலும் வெற்றிலை மிக முக்கியமான ஒன்று. விருந்துக்குப் பிறகு தாம்பூலம் தரித்தல் என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்களின் உணவின் மிக முக்கிய அம்சம். வெறுமனே பழக்கம் என்பதோடு மட்டுமல்ல, செரிமானக் கோளாறு, சளி, இருமல் போன்ற பிரச்னைகளுக்கும் வெற்றிலை அரிய நிவாரணி.
விவசாயம்தான் பிரதான தொழிலான தருமபுரி மாவட்டத்தில் வெள்ளோலை என்ற மலைச்சாரல் பகுதி வெற்றிலை சாகுபடிக்குப் பெயர்போனது.
நீளமாக வளர்ந்த முருங்கை, அகத்தி, தகரை ஆகிய மரங்களில் கொடியாக ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் வெற்றிலைச் செடித் தோட்டத்துக்கு, காற்றுக்குப் பயந்து சுற்றிலும் பாதுகாப்பான அடைப்புகள் இருக்கும். இதுதான் வெற்றிலைக் கொடிக்காலுக்கு அடையாளம். வெள்ளோலைப் பகுதிகளில் இந்தக் காட்சியைத் தாராளமாகப் பார்க்க முடியும்.
ஆண்டு முழுவதும் வருமானம் தரும் இச் சாகுபடியில், 21 நாட்களுக்கு ஒருமுறை வெற்றிலை கிள்ளுவார்கள். வெள்ளோலை வெற்றிலை மாதந்தோறும் பவானி அருகேயுள்ள காளிங்கராயன்பாளையம் சந்தைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
பிரதான கொடியில் வரும் முற்றிய இலைகள் மட்டை வெற்றிலை என்றும், கிளைக் கொடிகளில் இருந்து வரும் இலைகள் கைமாறு வெற்றிலை என்றும் அழைக்கப்படுகிறது. மட்டை வெற்றிலை வெளி மாநிலங்களுக்கு பீடா தயாரிப்புக்காகச் செல்கிறது.
ஒரு கட்டுக்கு 100 வெற்றிலை. 28 கட்டுகளைக் கொண்டது ஒரு சுமை. சுமையொன்றுக்கு ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரை வெற்றிலைக்கு விலை கிடைக்கிறது. சராசரியாக ஒரு சுமை வெற்றிலை ரூ. 4 ஆயிரம்.
பரம்பரையாக வெற்றிலை சாகுபடியில் ஈடுபட்டு வரும் ஜாலிகொட்டாயைச் சேர்ந்த என். நரசிம்மன் கூறியது:
ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் குடும்பம் வெற்றிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளோலைப் பகுதியில் சுமர் 50 ஏக்கரில் வெற்றிலை சாகுபடி நடைபெற்று வந்தது. ஆனால், இப்போது 20 ஏக்கரைத் தாண்டினாலே பெரிய விஷயம்.
ஒரு சுமை வெற்றிலை விலை சராசரியாக ரூ. 4 ஆயிரம்தான் பல ஆண்டுகளாக. ஆனால், வேலையாள் கூலி பல மடங்கு உயர்ந்திருக்கிறது. போக்குவரத்துச் செலவும், நோய்த் தாக்குதல் மற்றும் பூச்சித் தொல்லையில் இருந்து பாதுகாக்கும் மருந்து, உரம் விலைகளும் பல மடங்கு உயர்ந்திருக்கின்றன.
தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட எந்தவொரு அரசுத் துறையில் இருந்தும் மானியமோ, பயிற்சியோ, நிவாரணமோ வெற்றிலை விவசாயிகளுக்குக் கிடையாது. அரசு எங்கள் பக்கமும் கவனத்தைத் திருப்பினால் வெள்ளோலை வெற்றிலை மீண்டும் செழித்துத் தழைக்கும் என்கிறார் நரசிம்மன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

