நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

தேசிய மாணவர் படையினர் விழிப்புணர்வுப் பேரணி

தருமபுரியில் பள்ளி மற்றும் கல்லூரி தேசிய மாணவர் படை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :13 பிப்ரவரி 2019, 10:24 am IST

தருமபுரியில் பள்ளி மற்றும் கல்லூரி தேசிய மாணவர் படை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  காவல் துணைக் கண்காணிப்பாளர் த.காந்தி தலைமை வகித்து பேரணியைத் தொடக்கி வைத்தார். இப் பேரணியில், தருமபுரி அரசு கலைக் கல்லூரி, ஜெயம் பொறியியல் கல்லூரி,  அதியமான் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த தேசிய மாணவர் படையினர் பங்கேற்று, சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், பாதுகாப்பான சாலை பயணம் தொடர்பாகவும் பல்வேறு விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பினர். மேலும், துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.  பேரணியில் புலி வேடம் தரித்து மாணவர்கள் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மருத்துவக் கல்லூரி முன் தொடங்கிய இப்பேரணி, நெசவாளர் காலனி, நான்கு முனைச் சாலை சந்திப்பு, பேருந்து நிலையம், சித்த வீரப்ப தெரு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக சென்று தொலைத் தொடர்பு நிலையம் அருகே நிறைவடைந்தது. இதில், தேசிய மாணவர் படை அலுவலர்கள்,  விஜய தேவன், முருகன் மற்றும் முருகேசன், ஆசிரியர்கள், போக்குவரத்துக் காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.