தருமபுரியில் பள்ளி மற்றும் கல்லூரி தேசிய மாணவர் படை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் நடைபெற்ற நிகழ்ச்சியில், காவல் துணைக் கண்காணிப்பாளர் த.காந்தி தலைமை வகித்து பேரணியைத் தொடக்கி வைத்தார். இப் பேரணியில், தருமபுரி அரசு கலைக் கல்லூரி, ஜெயம் பொறியியல் கல்லூரி, அதியமான் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த தேசிய மாணவர் படையினர் பங்கேற்று, சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், பாதுகாப்பான சாலை பயணம் தொடர்பாகவும் பல்வேறு விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பினர். மேலும், துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். பேரணியில் புலி வேடம் தரித்து மாணவர்கள் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மருத்துவக் கல்லூரி முன் தொடங்கிய இப்பேரணி, நெசவாளர் காலனி, நான்கு முனைச் சாலை சந்திப்பு, பேருந்து நிலையம், சித்த வீரப்ப தெரு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக சென்று தொலைத் தொடர்பு நிலையம் அருகே நிறைவடைந்தது. இதில், தேசிய மாணவர் படை அலுவலர்கள், விஜய தேவன், முருகன் மற்றும் முருகேசன், ஆசிரியர்கள், போக்குவரத்துக் காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுக் கடைகள் மூடல் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்: கமல்ஹாசன்

ஏப்ரலில் சில்லறை பணவீக்கம் 3.48%

பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: க.கிருஷ்ணசாமி
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
