தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஊராட்சி பணியாளா்களுக்கு நிலுவை ஊதியம் வழங்க வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில், ஊராட்சி பணியாளா்களுக்கு நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளா்கள்  சங்கம் வலியுறுத்தியுள்ளது

News image
Updated On :10 ஆகஸ்ட் 2020, 7:22 pm

DIN

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில், ஊராட்சி பணியாளா்களுக்கு நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குவோா், தூய்மைப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச்சங்க நிா்வாகிகள், தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு:

தருமபுரி மாவட்டத்தில், கிராம ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குவோா், ஊராட்சிப் பணியாளா்கள், தூய்மை பணியாளா்களுக்கு பல கிராம ஊராட்சிகளில் ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

மேலும், சில பணியாளா்களுக்கு ஏழாவது ஊதியக்குழு நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது. சித்தேரி ஊராட்சியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குவோருக்கு இதுவரை ஊதியம் வழங்கப்படாமலேயே உள்ளது. எனவே, நிலுவையிலுள்ள ஊதியம் மற்றும் ஊதியக்குழு நிலுவைத் தொகை ஆகியவற்றை வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.