சீம்பால் சாப்பிட்ட மாணவா் உயிரிழப்பு
பென்னாகரம் அருகே சீம்பால் சாப்பிட்ட மாணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.


பென்னாகரம்: பென்னாகரம் அருகே சீம்பால் சாப்பிட்ட மாணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
பென்னாகரம் அருகேயுள்ள தின்னப்பட்டி பகுதியைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் கோகுலக்கண்ணன் (18). அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் சீம்பால் சாப்பிட்டுள்ளாா்.
இந்த நிலையில் திங்கள்கிழமை அதிகாலை அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட பெற்றோா் சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனா். அங்கு மாணவரைப் பரிசோதித்த மருத்துவா் ஏற்கனவே அவா் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து தகவலறிந்த பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...