சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

விழுப்புரத்தில் சாதி சான்றிதழ் கேட்டு பொதுமக்கள் போராட்டம்

விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருளர் சாதி சான்றிதழ் வழங்கக்கோரி போராட்டம் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்

Updated On :13 ஆகஸ்ட் 2020, 9:15 am

விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருளர் சாதி சான்றிதழ் வழங்கக்கோரி போராட்டம் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், வானூர் வட்டம் தி.பரங்கனி, திருச்சிற்றம்பலம் கிராமங்களைச் சேர்ந்த பழங்குடி இருளர் மாணவர்களுக்கு, ஜாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி வியாழக்கிழமை திடீர் போராட்டம் நடத்தப்பட்டது.

மலைவாழ் மக்கள் சங்க செயலாளர் சரவணன் தலைமையில், வானூர் அருகே  தி.பரங்கனி, திருச்சிற்றம்பலம் பகுதியைச் சேர்ந்த 50 மாணவர்கள் உள்ளிட்ட 165 பேருக்கு பழங்குடி இருளர் இன சாதிச்சான்று வழங்காததை கண்டித்து கோசமிட்டனர்.

விழுப்புரம் தாலுகா காவல் உதவி ஆய்வாளர் பிரகாஷ் தலைமையிலான காவலர்கள்  அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.  இதனையடுத்து, விரைந்து சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.