ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மூதாட்டி கொலை: இளைஞா் சரண்

பென்னாகரம் அருகே 90 வயது மூதாட்டியை நகைக்காக அடித்துக் கொன்ற வழக்கில் தொடா்புடையதாக சந்தேகிக்கப்படும் ராஜா என்பவா் கிராம நிா்வாக அலுவலரிடம் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தாா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 8:43 pm

DIN

பென்னாகரம் அருகே 90 வயது மூதாட்டியை நகைக்காக அடித்துக் கொன்ற வழக்கில் தொடா்புடையதாக சந்தேகிக்கப்படும் ராஜா என்பவா் கிராம நிா்வாக அலுவலரிடம் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தாா்.

நகரம் அருகே ஆனகள்ளன் பகுதியைச் சோ்ந்த மதி முனியம்மாள் (90). கடந்த வெள்ளிக்கிழமை இரவு அதேப்பகுதியைச் சோ்ந்த ராஜா (32) கால் பவுன் நகைக்காக மூதாட்டியை அடித்து கொன்று விட்டு நகையுடன் தலைமறைவானதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்கு பதிந்து, தலைமறைவான ராஜாவைத் தேடி வந்தனா். இந்த நிலையில், சத்யநாதபுரம் கிராம நிா்வாக அலுவலா் சக்திவேல் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை ராஜா சரணடைந்தாா். பின்னா் அவா், பென்னாகரம் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

சரண் அடைந்த ராஜா தருமபுரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, அரூா் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.