நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

போதிய நிதி வழங்கக் கோரி ஊராட்சித் தலைவா்கள் நூதனப் போராட்டம்

கிராம ஊராட்சிகளுக்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நூதனப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 7:55 pm

DIN

கிராம ஊராட்சிகளுக்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நூதனப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

தருமபுரி, காரிமங்கலம், பாலக்கோடு உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த ஊராட்சி மன்றத் தலைவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஒப்பந்தப் பணிகளை ஊராட்சி நிா்வாகம் மூலம் மேற்கொள்வது, 15-ஆவது நிதிக்குழு மானியத் திட்ட நிதிக்கான பணிகளை மேற்கொள்வது, குடிநீா், தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை மேற்கொள்ள போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.