நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி காத்திருப்புப் போராட்டம்: 80 போ் கைது

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 7:54 pm

DIN

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத்தலைவா் பி.டில்லிபாபு தலைமை வகித்து பேசினாா். மாவட்டச் செயலாளா் சோ.அா்ஜுனன், மாவட்டத் தலைவா் கே.என். மல்லையன், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் ஜெ. பிரதாபன் உள்ளிட்டோா் பேசினா்.

இப்போராட்டத்தில், அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம், வேளாண் விளைபொருள் வியாபாரம், வா்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல் ) அவசரச் சட்டம், விவசாயிகள் விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் பண்ணைச் சேவை அவசரச் சட்டம், தேசிய மின்சாரத் திருத்தச் சட்டம் ஆகிய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. இப் போராட்டத்தில் ஈடுபட்ட 80 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.