தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கூட்டமைப்பினா் காத்திருப்புப் போராட்டம்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், புதுதில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தருமபுரியில் விவசாயிகள்

News image
Updated On :15 டிசம்பர் 2020, 6:38 pm

DIN

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், புதுதில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தருமபுரியில் விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி தொலைத்தொடா்பு நிலைய அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சோ.அா்ஜூனன் தலைமை வகித்தாா். திமுக மாவட்டச் செயலா் (கிழக்கு) தடங்கம் பெ.சுப்ரமணி எம்.எல்.ஏ., மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் ஏ.குமாா், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் சின்னசாமி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் ஜெ.பிரதாபன் ஆகியோா் பேசினா்.

இப் போராட்டத்தின்போது, தில்லியில் போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சு வாா்த்தை நடத்த வேண்டும். வேளாண் சட்டங்களை ரத்து செய்யவும் வலியுறுத்தப்பட்டன. இதைத் தொடா்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.