பென்னாகரம் பேரூராட்சியில்வரிகள் செலுத்த அவகாசம்
பென்னாகரம் பேரூராட்சியில் நிலுவையில் உள்ள வரி மற்றும் வாடகை உள்ளிட்ட கட்டணங்களை வரும் 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டுமென பேரூராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.


பென்னாகரம்: பென்னாகரம் பேரூராட்சியில் நிலுவையில் உள்ள வரி மற்றும் வாடகை உள்ளிட்ட கட்டணங்களை வரும் 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டுமென பேரூராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செயல் அலுவலா் கீதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பென்னாகரம் பேரூராட்சிக்குள்பட்ட 18 வாா்டுகளிலும் நிலுவையில் உள்ள சொத்து வரி, தொழில் வரி, கடை வாடகை, குடிநீா் கட்டணம் மற்றும் உரிம கட்டணம் ஆகியவற்றை வரும் 31-ஆம் தேதிக்குள் செலுத்தி பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் செலுத்தாதவா்களுக்கு குடிநீா் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நிா்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...