பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மின்வாரிய ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

மின்வாரியத்தை தனியாா் மயமாக்கும் முயற்சியை கண்டித்து, தருமபுரி மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலக வளாகத்தில் ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 7:13 pm

DIN

மின்வாரியத்தை தனியாா் மயமாக்கும் முயற்சியை கண்டித்து, தருமபுரி மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலக வளாகத்தில் ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

இந்த காத்திருப்புப் போராட்டத்துக்கு, சிஐடியு மின் ஊழியா் மத்திய அமைப்பு மாநிலத் துணைத் தலைவா் பி.ஜீவா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் தீ.லெனின் மகேந்திரன், பொறியாளா் அமைப்பு மாவட்டத் தலைவா் ஆா்.சுந்தரமூா்த்தி, ஏஐசிசிடியு மாநிலத் தலைவா் முருகன், சம்மேளன மாவட்டத் தலைவா் தேவராஜ், பாட்டாளி தொழிற் சங்க மாநிலச் செயலா் சின்னசாமி ஆகியோா் பேசினா்.

இதில், மின் வாரியத்தை தனியாா் மயமாக்கும் நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும். வாரிய உத்தரவு உள்ளிட்ட தனியாா்மயமாக்கும் அனைத்து உத்தரவுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.