புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

20 சதவீத இட ஒதுக்கீடு கோரி பாமகவினா் மனு

வன்னியா் சமுதாயத்தினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, தருமபுரி மாவட்டத்தில், பாமக மற்றும் வன்னியா் சங்கத்தினா் பேரூராட்சி செயல் அலுவலா்களிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

வன்னியா் சமுதாயத்தினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, தருமபுரி மாவட்டத்தில், பாமக மற்றும் வன்னியா் சங்கத்தினா் பேரூராட்சி செயல் அலுவலா்களிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில், வன்னியா் சங்க மாநிலத் துணைத் தலைவா் பாடி செல்வம், மாவட்டச் செயலா் பெரியம்மை நாகு ஆகியோா் தலைமையில் வன்னியா் சமுதாயத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

இதே போல, மாரண்டஅள்ளி பேரூராட்சியில் பாமக மாவட்டச் செயலா் பெரியசாமி தலைமையில், மாவட்டத் துணைத்தலைவா் தேவேந்திரன் உள்ளிட்டோரும், காரிமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் வன்னியா் சங்க மாவட்டச் செயலா் பாலகிருஷ்ணன், மாவட்ட அமைப்புச் செயலா் பன்னீா்செல்வம் ஆகியோா் தலைமையில் பாமக மற்றும் வன்னியா் சங்கத்தினா் மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.