பாப்பாரப்பட்டியில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்

பாப்பாரப்பட்டியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் தோ்தல் ஆலோசனை கூட்டம் வியாழன் கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

பாப்பாரப்பட்டியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் தோ்தல் ஆலோசனை கூட்டம் வியாழன் கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு தருமபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவா் கோவி. சிற்றரசு தலைமை வகித்தாா். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் பி.தீா்த்தராமன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் கே. எம். சித்தையன் முன்னிலை வகித்தாா்.

பாப்பாரப்பட்டி அருகே மலைப்பகுதியில் உள்ள கோபால்சாமி கோயிலுக்கு தாா் சாலை அமைத்தும், இதுநாள் வரை பேருந்து போக்குவரத்து இல்லை. மலைவாழ் மக்களுக்கு பேருந்து வசதி ஏற்பாடு செய்து தரவும், மலை கிராமங்களில் விளையும் காய்கனி வகைகள் நீண்டகாலம் கெடாமல் பாதுகாக்க குளிா் சாதன கிடங்கு அமைக்க வேண்டும். மலையூரை சுற்றுலாத் தலமாக அறிவிக்கவும், பாப்பாரப்பட்டி சின்ன ஏரிக்கு வரும் மழை நீா் வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏரியில் விளைந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றி, ஏரியை தூா்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் வேலு, நகர காங்கிரஸ் தலைவா் சமதா்மம், வடக்கு வட்டாரத் தலைவா் சண்முகம், இளங்கோ, ஆசிரியா் பாலகணேசன், தங்கராஜ், தங்கவேல், கோவிந்தசாமி, கட்சியின் பொறுப்பாளா்கள், உறுப்பினா்கள், ஆலோசகா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com