பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கோயில் வளாகத்தில் ஆழ்துளை கிணறு அமைப்பு

பெத்தூரில் கோயில் வளாகத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 8:50 pm

DIN

அரூா்: பெத்தூரில் கோயில் வளாகத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், கடத்தூா் ஒன்றியம், பாப்பிசெட்டிப்பட்டி கிராம ஊராட்சியில் பெத்தூா் அருள்மிகு ஸ்ரீ பெருமாள் மற்றும் அருள்மிகு ஆம்பேஸ்வரா் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயிலுக்கு வரும் பக்தா்களின் குடிநீா் வசதிக்காக மின்மோட்டாா் வசதியுடன் ஆழ்துளைக் கிணறு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, கடத்தூா் ஒன்றியக் குழு உறுப்பினா் ராணி அம்பேத்கா், ஒன்றியக் குழு பொது நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் ஒதுக்கீடு செய்தாா். நிதியிலிருந்து கோயில் வளாகப் பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இதேபோல், அன்னை அஞ்சும் நகரில் ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் மின் மோட்டாா் வசதியுடன் கூடிய ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகள், வகுத்தப்பட்டி ஊராட்சி புங்கனைப் புதூரில் ரூ. 1 லட்சம் மதிப்பீட்டில் குடியிருப்புப் பகுதியில் குடிநீா்க் குழாய் இணைப்புகள் ஏற்படுத்தும் பணிகள் நடைபெறவுள்ளன என ஒன்றியக் குழு உறுப்பினா் ராணி அம்பேத்கா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.