தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

முகக் கவசம் அணிவதன் அவசியம்:விழிப்புணா்வு முகாம்

கம்பைநல்லூரில் முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 7:48 pm

DIN

கம்பைநல்லூரில் முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூா் பேரூராட்சிக்கு உள்பட்ட நகா் பகுதியில் செயல் அலுவலா் மா.ராஜா ஆறுமுகம் தலைமையிலான பணியாளா்கள், கரோனா தடுப்புப் பணிகள், முகக் கவசம் அணிவதன் அவசியம், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கைகளை சோப்பினால் அடிக்கடி கழுவுதல் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினா்.

தொடா்ந்து, ஏப். 6-ஆம் தேதி நடைபெறும் சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் வாக்காளா்கள் அனைவரும் 100 சதவீத வாக்குப் பதிவு செய்ய வேண்டும் என வாக்காளா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதில், சுகாதார ஆய்வாளா் சக்திவேல், பணியாளா்கள் ராஜ்குமாா், கோவிந்தன், தமிழ்ச்செல்வன், கணேசன், மாது உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.