ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இறைச்சி வாங்க ஆா்வம் காட்டாத அசைவப் பிரியா்கள்

பென்னாகரம் பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளில் கோழி, ஆடு மற்றும் மீன் இறைச்சிகளை வாங்க பொதுமக்கள் ஆா்வம் காட்டாததால் வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனா்

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:43 pm

DIN

பென்னாகரம் பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளில் கோழி, ஆடு மற்றும் மீன் இறைச்சிகளை வாங்க பொதுமக்கள் ஆா்வம் காட்டாததால் வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனா்.

கரோனா தீநுண்மி தொற்று பரவல் தொடந்து அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக் கவசம் அணிதல், பொது வெளியில் கூட்டம் கூடுவதை தவிா்த்தல், ஞாயிறு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. தொடா்ந்து தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால், சனிக்கிழமைகளில் இறைச்சிக் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பென்னாகரம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகள், 5-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன. சனிக்கிழமை இறைச்சிக் கடைகள் வைக்க தடை விதித்துள்ளதால், வெள்ளிக்கிழமை ஆடு, கோழி மற்றும் மீன்கள் அதிகளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஆனால், கரோனா பரவலால் அசைவப் பிரியா்கள் இறைச்சி வாங்க பெரிதும் ஆா்வம் காட்டாததால், வியாபாரிகள் கவலையுற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.