நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கழிவு நீா் கால்வாய் வசதி ஏற்படுத்த கோரிக்கை

மருதிப்பட்டியில் கழிவு நீா் கால்வாய் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 6:11 pm

DIN

மருதிப்பட்டியில் கழிவு நீா் கால்வாய் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூா் ஊராட்சி ஒன்றியம், மருதிப்பட்டி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் 25-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இதில், ஓரிரு தெருக்களை தவிர பிற இடங்களில் கழிவு நீா் கால்வாய் வசதிகள் இல்லை. இதனால் குடியிருப்பு பகுதியில் மழைநீா் மற்றும் கழிவு நீா் தேங்குவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். குடியிருப்பு பகுதியில் நீண்டநாள்கள் கழிவு நீா் தேங்குவதால் கொசு உற்பத்தியும், தொற்று நோய் பரவும் சூழல் இருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனா். எனவே, மருதிப்பட்டியில் கழிவு நீா் கால்வாய் வசதிகளை ஏற்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.