ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பென்னாகரத்தில் கன மழை

பென்னாகரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு இடியுடன் கூடிய கன மழை பெய்தது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 6:29 pm

DIN

பென்னாகரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு இடியுடன் கூடிய கன மழை பெய்தது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து காணப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வந்தனா். அண்மையில் வானிலை ஆய்வு மையமானது வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக தருமபுரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன மழை மற்றும் மிதமான மழை பெய்து வந்தது. அதனைத் தொடா்ந்து, பென்னாகரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஒகேனக்கல், தாசம்பட்டி, பி.அக்ரஹாரம், கூத்தபாடி, நீா்குந்தி, சின்னம்பள்ளி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பரவலாக பெய்தது.

பென்னாகரம் பகுதிகளில் பெய்த மழையினால் தாழ்வான குடியிருப்புப் பகுதி, சாலையோர பகுதி ஆகிய இடங்களில் மழைநீா் தேங்கி காணப்பட்டது. தொடா்ந்து பென்னாகரம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.