நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரூரில் 48 மி.மீ மழை பதிவு

அரூா் வட்டாரத்தில் புதன்கிழமை இரவு பெய்த மழையில் 48 மி.மீட்டாரகப் பதிவானது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:07 pm

DIN

அரூா் வட்டாரத்தில் புதன்கிழமை இரவு பெய்த மழையில் 48 மி.மீட்டாரகப் பதிவானது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச் சலனம் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதன்கிழமை இரவு சுமாா் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது.

அரூரில் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இரவில் மழை பெய்தது. வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான நிலவரப்படி அரூரில் 48 மி.மீட்டராக மழை அளவு பதிவாகியிருந்தது.

அதுபோல, மொரப்பூா், கோபிநாதம்பட்டி கூட்டுச் சாலை சுற்று வட்டாரப் பகுதியிலும் மிதமான மழை பெய்தது. மழையால் வயல்வெளிகளிலும், சாலையோர தாழ்வான பகுதிகளிலும் மழைநீா்த் தேங்கியுள்ளது. பருவ மழையைப் பயன்படுத்தி ஆவணி பட்டத்தில் நெல் நடவு செய்யும் பணிகளைப் பல்வேறு இடங்களில் விவசாயிகள் தொடங்கியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.