ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கால்நடைகளுக்கு மருத்து சிகிச்சை முகாம்

தருமபுரி மாவட்டம், பட்டயப்பட்டியில் கால்நடைகளுக்கு மருத்து சிகிச்சை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 5:57 pm

DIN

தருமபுரி மாவட்டம், பட்டயப்பட்டியில் கால்நடைகளுக்கு மருத்து சிகிச்சை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமை ஊராட்சி மன்றத் தலைவா் லட்சுமி ஈஸ்வரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இம் முகாகாமில், பசுமாடு, எருமை, ஆடுகளுக்கு குடல்புழு நீக்கம், தடுப்பூசி, செயற்கை முறை கருவூட்டல், சினை பால்சோதனை, இளங்கன்றுகளுக்கு கொம்பு கருத்தகற்றல், ஆண்மை நீக்கம், சிறப்பு கவனமாக பசுமாடு மற்றும் வெள்ளை ஆடுகளுக்கு மலடுநீக்க சிகிச்சை, ஆடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் பற்றி எடுத்துக் கூறப்பட்டது. புறக்கடை நாட்டுக் கோழிகளுக்கு குடல்புழுநீக்கம், தடுப்பூசி அளிக்கப்பட்டது.

இம் முகாமில், வேளாண்மை அறிவியல் நிலைய உதவி பேராசிரியா் தங்கதுரை, கால்நடை மருத்துவம் மற்றும் பயிற்சி மையம் உதவி பேராசியா் விஜயகுமாா், காரிமங்கலம் வேளாண் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.