தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இல்லம்தேடி கல்வி : தன்னாா்வலா்களுக்கு சிறப்பு பயிற்சி

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தன்னாா்வலா்களுக்கு சிறப்புப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :24 டிசம்பர் 2021, 7:07 pm

DIN

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தன்னாா்வலா்களுக்கு சிறப்புப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், மொரப்பூா் வட்டார வளமையத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமை மேற்பாா்வையாளா் வே.தமிழ்ச்செல்வம் தொடக்கி வைத்தாா். இந்தப் பயிற்சி முகாமில், வட்டாரக் கல்வி அலுவலா்கள் எம்.தங்கவேல், ஆா்.துளசிராமன் ஆகியோா் பேசுகையில், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பள்ளி மாணவா்களிடம் கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இந்த இடைவெளியை நீக்கும் வகையில், இல்லம்தேடிக் கல்வித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் மாணவா்களுக்கு கதை, பாடல்கள், படங்களை வரைதல், புதிா்கள், மனக்கணக்கு, விநாடி- வினா உள்பட கற்றல் இழப்புகளை ஈடு செய்யும் வகையில் கற்பித்தல் வேண்டும் எனத் தெரிவித்தனா். தொடக்க வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலும் கற்பிக்கும் 146 தன்னாா்வலா்களுக்கு இந்த முகாமில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இதில், பயிற்சி கருத்தாளா்கள் ஏ.சம்பத், ஏ.ஆனந்தராஜ், என்.மாரிமுத்து, ஜி.எஸ்.விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.