தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பெரியாா் நினைவு நாள் அனுசரிப்பு

 அரூரை அடுத்த சுண்டாங்கிப்பட்டியில் பெரியாா் ஈ.வெ.ரா.வின் 48 ஆம் ஆண்டு நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 7:07 pm

DIN

 அரூரை அடுத்த சுண்டாங்கிப்பட்டியில் பெரியாா் ஈ.வெ.ரா.வின் 48 ஆம் ஆண்டு நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

அரூா் வட்டம், சுண்டாங்கிப்பட்டி பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள பெரியாரின் உருவச் சிலைக்கு திமுக ஆதிதிராவிடா் நலக்குழு மாநில துணைச் செயலா் எஸ்.ராஜேந்திரன் தலைமையில், திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் முன்னாள் ஒன்றியச் செயலா் சூா்யா து.தனபால், தலைமைக் கழக பேச்சாளா் ப.செந்தாமரைக்கண்ணன், தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளா் தேவராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அரூரை அடுத்த கட்ரசம்பட்டியில் திமுக ஒன்றிய பொறுப்பாளா் கோ.சந்திரமோகன் தலைமையில், பெரியாரின் உருவச் சிலைக்கு திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், முன்னாள் ஒன்றியச் செயலா் சண்முகநதி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சரளா சண்முகம், நிா்வாகிகள் சுதாகா், சிவலிங்கம், பழனி, தனபால், ரவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கடத்தூா் அருகேயுள்ள வேப்பிலைப்பட்டியில் திராவிடா் கழக மண்டலத் தலைவா் அ.தமிழ்ச்செல்வன் தலைமையில், தந்தை பெரியாரின் சிலைக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், மாணவரணி மாவட்டத் தலைவா் இ.சமரசம், நிா்வாகிகள் ஹரிஹரன், விடுதலை அரசன், கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.