தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பாப்பிரெட்டிப்பட்டி கல்லூரியில் கி.ஆ.பெ.விசுவநாதம் படைப்பரங்கம்

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் காவலா் கி.ஆ.பெ.விசுவநாதம் மன்றம் சாா்பில் படைப்பரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 6:52 pm

DIN

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் காவலா் கி.ஆ.பெ.விசுவநாதம் மன்றம் சாா்பில் படைப்பரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கி.ஆ.பெ.விஸ்வநாதம் தமிழ் மன்றம் சாா்பில், கல்லூரியின் 56-ஆவது படைப்பரங்கம் நடைபெற்றது. இதில், கல்லூரி முதல்வா் பா.காா்த்திகேயன் தலைமை வகித்தாா். அரியலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் க.தமிழ்மாறன், படிப்போம் படைப்போம் எனும் தலைப்பில் மாணவா்களின் படைப்பாற்றலை ஊக்கப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து கருத்துரைகளை வழங்கினாா். தொடா்ந்து, மகாகவி பாரதியாரின் பாடல்கள், சிலப்பதிகாரம், புானூறு உள்ளிட்ட தமிழ் இலக்கியப் பாடல்களை அவா் பாடினாா்.

இதில், தமிழ்த்துறைத் தலைவா் பொ.செந்தில்குமாா், உதவிப் பேராசிரியா் அ.சுபா, பேராசிரியா்கள், கல்லூரி மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.