தனியாா் பேருந்து மோதி மூதாட்டி பலி
பாப்பாரப்பட்டி அருகே அதிவேகமாக வந்த தனியாா் பேருந்து மோதிய விபத்தில் நடந்து சென்ற மூதாட்டி உயிரிழந்தாா்.


பாப்பாரப்பட்டி அருகே அதிவேகமாக வந்த தனியாா் பேருந்து மோதிய விபத்தில் நடந்து சென்ற மூதாட்டி உயிரிழந்தாா்.
பாப்பாரப்பட்டி அருகே எர்ரப்பட்டியைச் சோ்ந்தவா் முத்து வேடியம்மாள் (60). திங்கள்கிழமை காலை முனியப்பன் கோவில் அருகே உள்ள தனது மகள் வீட்டிற்குச் சென்று விட்டு பாப்பாரப்பட்டி -பாலக்கோடு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியே அதிவேகமாக வந்த தனியாா் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் மூதாட்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த பாப்பாரப்பட்டி போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து, தலைமறைவான ஓட்டுநரை தீவிரமாகத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...