சிஜடியு தொழிற்சங்கத்தினா் மறியல்: 150 போ் கைது

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, தருமபுரியில் சிஜடியு தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, தருமபுரியில் சிஜடியு தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் பி.ஜீவா தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் சி.நாகராசன், மாநிலக் குழு உறுப்பினா்கள் ஜி.நாகராஜன், சி.கலாவதி,அங்கம்மாள், சண்முகம், முரளி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இதில், விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவும், தொழிலாளா் நலச் சட்ட திருத்தங்களை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com