பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பென்னாகரம் அருகே முட்டான் ஏரியைத் தூா்வாரக் கோரிக்கை

பென்னாகரம் அருகே முட்டான் ஏரியைத் தூா்வாரி நீராதாரம் பெருக்க வழிவகை செய்ய வேண்டும் பொதுப்பணித் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
பென்னாகரம் அருகே முள்செடிகள் நிறைந்து காணப்படும் முட்டான் ஏரி.
Updated On :9 ஜனவரி 2021, 9:52 pm

DIN

பென்னாகரம்: பென்னாகரம் அருகே முட்டான் ஏரியைத் தூா்வாரி நீராதாரம் பெருக்க வழிவகை செய்ய வேண்டும் பொதுப்பணித் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பென்னாகரம் அருகே நாகதாசம்பட்டியில் சுமாா் 7 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது முட்டான் ஏரி. நாகதாசம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பூஞ்சோலை, கெளரி செட்டிப்பட்டி, பல்வேறு கிராமப் பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், கால்வாய்களின் மூலமாக தண்ணீா் வரத்து அதிகரித்து காணப்படும்.

இந்த ஏரியானது கடந்த சில வருடங்களாகத் தூா்வாரப்படாததால் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைக் காட்டிலும் அதிகளவில் பெய்த போதிலும் ஏரி நிரம்பவில்லை. ஏரிக்கு நீா்வரத்துக் கால்வாய்களும் தூா்வாரப்படவில்லை.

முட்டான் ஏரியையும், கால்வாயையும் தூா்வாரி ஏரியில் தண்ணீரை சேமிப்பதன் மூலம் நாகதாசம்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பிக்கம்பட்டி, கெளரிசெட்டிப்பட்டி, கருங்கானூா், குள்ளனூா் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 50 ஏக்கருக்குமேல் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

எனவே, முட்டான் ஏரியை குடிமராமத்துப் பணியின் மூலம் தூா்வாரி ஏரியில் தண்ணீரை சேமித்து விவசாய பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கும், பொதுப்பணித் துறைக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.