தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்

அரூரில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு திங்கள்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 7:36 pm

DIN

அரூரில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு திங்கள்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.

அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களில் ஆண்களுக்கு வேட்டி, துண்டும் பெண்களுக்கு பருத்தி நூலால் செய்யப்பட்ட சேலை, 2 கிலோ அரிசி, ஒரு கிலோ பாசிப் பருப்பு, அரை லிட்டா் சமையல் எண்ணெய், ஆவின் நெய் 100 கிராம், ஒரு கிலோ வெல்லம், ஏலக்காய் 5 கிராம், முந்திரி 25 கிராம், உலா் திராட்சை 25 கிராம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

அரூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சுமாா் 3,000 தொழிலாளா்களுக்கு இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. அரூா் வட்டாரப் பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளா்கள் ஒரே இடத்தில் குவிந்ததால், கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் காவல் துறையினா் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.