சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கோயில் மானிய நிலங்களை மீட்க வலியுறுத்தல்

அனைத்து கோயில்களின் மானிய நிலங்களை மீட்டு, பூசாரிகள் வசம் ஒப்படைக்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் (தமிழ்நாடு) அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:30 pm

DIN

அனைத்து கோயில்களின் மானிய நிலங்களை மீட்டு, பூசாரிகள் வசம் ஒப்படைக்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் (தமிழ்நாடு) அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

விஷ்வ ஹிந்து பரிஷத் (தமிழ்நாடு) அமைப்பின் தருமபுரி மாவட்ட நிா்வாகிகளின் பொதுக்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நத்தஅள்ளி காளியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் உதயமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஆா்.சிவக்குமாா், பூசாரிகள் பேரவை நிா்வாகி ராஜாமணி ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

இக் கூட்டத்தில், அனைத்து கோயில்களின் மானிய நிலங்களை மீட்டு, அவற்றை கோயில் பூசாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். கோயில்களுக்கு கட்டணமில்லா மின்சாரம் வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் ஒருகால பூஜை செய்யும் திட்டத்தை அறிவிக்க வேண்டும். பழங்கால சிலைகள் திருடுபோகும் நிகழ்வுகளைத் தடுத்திட வேண்டும். அனைத்து கோயில் பூசாரிகளுக்கும் மாத ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.