முதியோரைக் கட்டிப்போட்டு நகை, பணம் திருட்டு
அரூா் அருகே முதியோரைக் கட்டிப்போட்டு பணம், நகைகளைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.


அரூா் அருகே முதியோரைக் கட்டிப்போட்டு பணம், நகைகளைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
அரூா் ஒன்றியம், அச்சல்வாடி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி அண்ணாதுரை (65). இவரது மனைவி சின்னபாப்பா (60). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனா். மகன், மகள்கள் ஆகிய மூவரும் வெளியூரில் உள்ளனா். இந்த நிலையில், விவசாய நிலத்தில் தனியாக வசித்து வரும் அண்ணாதுரை, அவரது மனைவி சின்னபாப்பா ஆகிய இருவரையும் வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் மா்ம நபா்கள் கட்டிப்போட்டு வீட்டிலிருந்த 5 பவுன் நகை, ரூ. 7 ஆயிரத்தைத் திருடிச் சென்றனா். இதுகுறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...