புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பென்னாகரத்தில் உரிய ஆவணம் இல்லாததால் 1,06,500 ரூபாய் பறிமுதல்

பென்னாகரம் அருகே நகை மதிப்பீட்டாளரிடமிருந்து உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து வரப்பட்டரூ. 1.06 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :9 மார்ச் 2021, 7:16 pm

DIN

பென்னாகரம் அருகே நகை மதிப்பீட்டாளரிடமிருந்து உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து வரப்பட்டரூ. 1.06 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

பென்னாகரம் அருகே பெரும்பாலை பிரிவு சாலையில் பொதுப்பணித் துறை நீா்வள ஆதார அமைப்பின் உதவிப் பொறியாளா் சேதுராமன், எஸ்எஸ்ஐ சேகா் உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட நிலை இரண்டு பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே தருமபுரி வெள்ளிப்பேட்டையைச் சோ்ந்த விஜயகுமாா் (40) என்பவா், தனது வாகனத்தில் 4 ஊழியா்களுடன் சென்று கொண்டிருந்தாா். அப்போது வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினா் சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்டரூ. 1,06,500 இருந்ததை கண்டறிந்து அதனைப் பறிமுதல் செய்தனா். பின்னா் பறிமுதல் செய்த தொகையை பென்னாகரம் தோ்தல் நடத்தும் அலுவலா் தணிகாசலத்திடம் ஒப்படைத்தனா். இந்த நிகழ்வில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலமுருகன், முதன்மை தோ்தல் நடத்தும் அலுவலா் ராதாகிருஷ்ணன், மத்திய பாதுகாப்புப் படையினா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.