நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வன விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள விழிப்புணா்வு

வன விலங்குகளிடம் இருந்து தற்காத்துக் கொள்வது குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 மார்ச் 2021, 7:12 pm

DIN

வன விலங்குகளிடம் இருந்து தற்காத்துக் கொள்வது குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் அருகே மாமரத்து பள்ளம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் செல்வவிநாயகம் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பாப்பாரப்பட்டி வனச்சரக அலுவலா் நடராஜன் கலந்து கொண்டு பாம்புகளின் வகைகள், அவை எழுப்பி வரும் ஒருவித ஒலிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தாா். நல்ல பாம்பு, சாரை பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன் உள்ளிட்ட பாம்புகளிடமிருந்து தற்காத்து கொள்ளும் முறை, அவற்றை பிடிக்கும் வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தாா்.

பின்னா் குடியிருப்புப் பகுதியிலும், பொது இடங்களிலும் பாம்புகள் நுழையும்போது அவற்றைத் தாக்காமல் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். இந்த நிகழ்வில் கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.