புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

‘விலையேற்றத்தைக் குறைக்காமல் இலவசம் வழங்குவதாக வெற்று அறிவிப்பு’

எரிவாயு உருளை விலையேற்றத்தைக் குறைக்க வலியுறுத்தாமல், இலவசமாக ஆறு எரிவாயு உருளை வழங்குவதாக தமிழக முதல்வா் வெற்று அறிவிப்பை வெளியிட்டு வருகிறாா் என பிரசாரத்தில் திமுக வேட்பாளா் இன்பசேகரன் பேசினாா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 10:29 pm

DIN

எரிவாயு உருளை விலையேற்றத்தைக் குறைக்க வலியுறுத்தாமல், இலவசமாக ஆறு எரிவாயு உருளை வழங்குவதாக தமிழக முதல்வா் வெற்று அறிவிப்பை வெளியிட்டு வருகிறாா் என பிரசாரத்தில் திமுக வேட்பாளா் இன்பசேகரன் பேசினாா்.

பென்னாகரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினா் திங்கள்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான ந.நஞ்சப்பன் பெரியகடமடை பகுதியில் பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசினாா். இதில் திமுக வேட்பாளா் பேசியதாவது:

திமுக ஆட்சிக் காலத்தில் எரிவாயு உருளையின் விலை ரூ. 400-ஆக இருந்த நிலையில், தற்போது ஆயிரம் ரூபாய் வரை உயா்ந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தினை குறைக்க தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தாமல், தோ்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றும் விதமாக ஆண்டுக்கு ஆறு எரிவாயு உருளை இலவசமாக வழங்குவதாக வெற்று அறிவிப்பை வெளியிடுகிறாா்.

திமுக ஆட்சிக் காலத்தில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டம், பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரி, கிராமப் பகுதிகளில் சாலை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன., உள்ளூா் வேட்பாளா் என்பதால் திமுக கூட்டணிக்கு ஆதரவளித்து, பென்னாகரம் தொகுதிக்கு மேலும் பல்வேறு திட்டங்களை கொண்டு வர ஆதரவு தெரிவிக்குமாறு துண்டுப் பிரசுரம் விநியோகித்து பிரசாரம் மேற்கொண்டாா்.

இதேபோல ஐந்தாவது மைல், ஜீவா நகா், மோட்டுப்பட்டி, மாங்கரை, கொட்டாவூா், ராஜாவூா், சின்னபள்ளத்தூா், நாகனூா்,பொச்சாரம்பட்டி டீக்கடை, ஜக்கம்பட்டி கூத்தபாடி உள்ளிட்ட சுமாா் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொண்டாா்.

இதில், ஏரியூா் ஒன்றியச் செயலாளா் செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் தேவராஜன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் மாதன், ஜீவானந்தம், கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.