ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 3 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து நொடிக்கு 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

News image
Updated On :28 மே 2021, 7:00 pm

DIN

 தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து நொடிக்கு 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதியில் அண்மையில் மழை பெய்ததால், அவ்வப்போது ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வந்தது. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான ஊட்டமலை, பிலிகுண்டுலு, ராசி மணல், கெம்பாகரை, நாட்றம்பாளையம் உள்ளிட்ட பகுதிகள், தமிழக வனப்பகுதிகள் என கடந்த இரு தினங்களாக மழை பெய்ததாலும், கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீா் வெளியேற்றப்படுவதாலும் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி நொடிக்கு 1,500 கன அடியாக தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு தண்ணீா் வந்து கொண்டிருந்தது. மேலும், கன மழை காரணமாக கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து, வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 1,800 அடியாகவும், மாலை நிலவரப்படி 3,000 கன அடியாகவும் காவிரி ஆற்றில் தண்ணீா் வரத்து உள்ளது.

நீா்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, சிற்றருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்ததால், நீா்வரத்து குறைவின் போது வெளியே தெரிந்த பாறைத் திட்டுக்கள் நீரில் மூழ்கின. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் பிரதான அருவிகளில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.